றுதிசுற்று படத்தில் குத்துச் சண்டை வீராங்கனையாக நடித்தவர் ரித்திகா சிங், படத்துக்காக மட்டுமல்ல இவர் நிஜத்தில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை. அவர் நடித்த முதல்படமே தேசிய விருது தட்டி வந்தது. படம் ஹிட்டான அளவுக்கு ரித்திகாவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு விஜய் சேதுபதியுடன்’ ’ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்தார். பிறகு’ அசோக் செல்வனுடன் ’ஓ மை கடவுளே’ படத்தில் நடித்தார். இவர் நடித்திருக்கும் வணங்காமுடி தாமதமாகி வருகிறது. அடுத்து பாக்ஸர் படத்தில் நடிக்கிறார். பாலாஜி குமர் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனியுடனும் நடிக்க உள்ளார்.


இறுதி சுற்று நடிகை ரித்திகா தனது 2வது சுற்றில் ஒரு கலக்கு கலக்கும் எண்ணத் துடன் கவர்ச்சிக்கும் ஒகே சொல்லியி ருந்தார். ஆனால் கொரோனா லாக்டவுன் அவரது காலையும் வாரிவிட்டது. தற்போது வீட்டில் பொழுதை கழிக்கும் அவர் உடலை ஃபிட்டாக வைத்திருக்க கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டி ருக்கிறார். தனது ஒர்க் அவுட் படங்கள் மற்றும் வீடியோக்களை தவறாமல் பகிர்ந்துள்ளார்.
சமீபத்திய வீடியோவில் கருப்பு டிஷர்ட் மற்றும் ஊதா பேன்ட் அணிந்து படுகவர்ச்சியான படத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டி ருக்கிறார். ரசிகர்கள் ஒரு பக்கம் பாராட்டி னாலும் இன்னொரு பக்கம் டோஸ் விட்டுக்கொண்டிருகின்றனர்.