ந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு மும்பை போலீஸார் விசாரிக்கின்றனர். இதற்கிடையில் சுஷாந்த்தின் தந்தை கே. கே. சிங், சுஷாந்த் காதலியும் நடிகையு மான ரியா மீது பாட்னா போலீசில் புகார் அளித்தார்.


சுஷாந்த்துக்கு அதிக அளவில் மாத்திரை கள் கொடுத்தார். அவரை அடைத்து வைத்து மிரட்டினார். அவரது வங்கி கணக் கிலிருந்து ரூ 15 கோடியை யாருக்கோ மாற்றியிருக்கிறார். சுஷாந்த்தின் பழைய வீட்டு வேலைக்காரரர்களை நிறுத்திவிட்டு தனக்கு தெரிந்த ஆட்களை நியமித்தார். சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டினார் என பல்வேறு குற்றச்சாட்டுக் கள் தெரிவித் திருந்தார்.
இதை எதிர்த்து ரியா சும்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பாட்னா போலீசிலி ருக்கும் இருக்கும் வழக்கை மும்பை போலீஸுக்கு மாற்ற கோரினார். அதை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
தற்போது சுஷாந்த் வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
சுஷாந்த் வழக்கை அமலாக்கத் துறையும் பதிவு செய்து விசாரணை தொடங்கி உள்ளது. அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ரியாவை ஆஜரா னார். அவர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டனர். சுஷாந்த் வங்கி கணக்கிலிருந்து ரூ 15 கோடி டிரன்ஸ்பர் செய்யப்பட்டது பற்றி ரியாவிடம் அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலை பதிவு செய் தனர்.
இதற்கிடையில் ரியா யார் யாரிடம் அதிகம் போனில் பேசியிருக்கிறார் என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது. சுஷாந்த்திடம் பேசியதைவிட அவர் வீட்டு வேலைக்காரர் சாமுவேலிடம் 287 முறை பேசி உள்ளார். சுஷாந்திடம் 145 முறை மட்டுமே பேசி இருக்கிறார்.
தனது தந்தையிடம் 1192 முறை, சகோதரர் சவுவிக்கிடம் 1069 முறை, தனது முன்னாள் மேனேஜர் ஸ்ருதியிடம் 761 முறை, இயக் குனர் மகேஷ் பட்டிடம் 16 முறை, இந்தி நடிகர் ஆதித்யா ராய் கபூரிடம் 23 முறை யும் பேசியுள்ளார் ரியா.
சுஷாந்த்தை பொறுத்தவரை ரியாவை 28 முறை மட்டுமே போனில் அழைத்திருக்கி றார்.