80களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷோபனா .தமிழை தவிர மலையாளத்திலும் தெலுங்கிலும் அவர் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

சில மாதங்கள் முன்பு வெளிவந்த Varane Avashyamund என்ற மலையாள படத்தில் அவர் நடித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் வெளிநாட்டினர் சிலரது வீடியோக்கள் தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பக்கத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தன்னுடைய அதிகாரபூர்வ முகநூல் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்திருப்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஷோபனா. “என்னுடைய முகநூல் கணக்கு மற்றும் பக்கத்தை மர்ம நபர்கள் சிலர் கைப்பற்றியுள்ளனர். அதை மீண்டும் பெற போலீஸ் உதவியுடன் முயன்று வருகிறோம். அது மீண்டும் கிடைத்ததும் மீண்டும் அதில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பேன்” என கூறியுள்ளார் ஷோபனா.