ஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் போன்ற படங் களில் பிஸியாக நடித்தவந்த ஸ்ரேயா வுக்கு திடீரென்று பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது அவர் நடிப்பில் நரகாசூரன் படம் மட்டுமே வெளிவர வேண்டி உள்ளது. இப்படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆகாமல் நிற்கிறது. இப்படம் வெளியாகும், அதன்மூலம் புதிய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த ஸ்ரேயாவுக்கு படம் வெளிவராததால் ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து தனது காதலன் ஆண்ட்ரி கோஷிவ்வை மணந்தார்

திருமணம் ஆனாலும் தனது உடற் கட்டை ஸ்லிம்மாகவும் கட்டுக் கோப் பாகவும் பராமரித்து வருகிறார் ஸ்ரேயா. கொரோனா ஊரடங்கில் கணவருடன் பொழுதை கழித்து வரும் ஸ்ரேயா அவருடன் ஷாப்பிங் செல்வது, வெறிச் சோடி கிடக்கும் சாலையில் நடனம் ஆடுவது, மழை பார்த்தவுடன் தனது முதல் பட ஞாபகத்தில் குத்தாட்டம் போடுவது என்று ஜாலியாக டைம் பாஸ் செய்கிறார். இதற்கிடையே அவர் கடற்கரை பகுதிக்கு சென்று கடலுக்குள் டைவ் செய்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். ’மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்புவோம் . எதிர்காலம் நல்லவிதமாக அமைய பிரார்த்திப்போம்’ என மெசேஜ் பதிவிட்டிருக்கிறார்.டூபீஸ் உடை அணிந்து வெளிச்சம்போட்டு காட்டி இன்னும் ஹீரோயின்  ரோலுக்கு நான் ஃபிட்டாக இருக்கிறேன் என்று புதிய பட வாய்ப்புகளுக்கு வலைவிரித்திருக்கிறார்.