காதல்கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் காதல், ஒருநாள் ஒரு கனவு, வானம். சதுரங்கம் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் சோனியா அகர்வால். இவர் சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாலி, மோதிரம் படம் மற்றும் வீடியோ வெளியிட்டு இன்னும் 3 நாள் பொறுத்திருங்கள் சேதி தெரியும் என்று சஸ்பென்ஸ் வைத்தார். அதை கண்டு ரசிகர்கள் தனது திருமண அறிவிப்பை சோனியா வெளியிடுவார் என்று எண்ணினர்.

சோனியா அகர்வால் ஏற்கனவே செல்வ ராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரண மாக விவாகரத்து பெற்று பிரிந்தார். பிறகு செல்வராகவன் மறுமணம் செய்துக் கொண்டார். சோனியவும் அதுபோல் மறுமணம் செய்துகொள்வார் என்று எண்ணி ரசிகர்கள் காத்திருந்தனர். தான் வைத்த சஸ்பென்ஸை உடைத்து எல்லோருக்கும் அல்வா தந்திருக்கிறார் சோனியா. அதாவது 3 நாள் முடிவில் அவர் கூறும்போது நண்பர்களுடன் சேர்ந்து திருமணம் நடத்தி தரும் நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக கூறியிருக்கிறார். நடிகையின் சஸ்பென்ஸ் பிசுபிசுத்துப் போனது.
நடிகை தற்போது சோனியா அகர்வால் ’வன்முறை’ மற்றும் தெலுங்கு ரீமேக்கிளும் நடித்து வருகிறார்.