டிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் வனிதா போலீசில் இன்று ஒரு புகார் அளித்தார்.

அதில், ’சூர்யா தேவி என்பவர் என்னைப் பற்றியும், நான் திருமணம் செய்து கொண்டது பற்றியும் அவதூறாக யூடியூபில் வீடியோ வெளியிடுகிறார். அவருக்கு தயாரிப் பாளர் ரவீந்தர் என்பவரும் உதவி புரிகிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுபற்றி விசாரித்து இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
வனிதாவுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்தது. கருத்துவேறுபாடு காரணமாக அவர்க ளிடமிருந்து வனிதா விவாகரத்து பெற்ற நிலை யில் பீட்டர்பால் என்பவரை 3வதாக திரு மணம் செய்துகொண்டார். பீட்டர் பாலும் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது பின்னர் தெரியவந்தது. வனிதா, பீட்டர் பால் மீது பீட்டர் பாலின் முதல் மனைவி போலீ ஸில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.