டெல்லி: அதானி – அம்பானி விவசாயச் சட்டத்தைத திரும்பப் பெறுங்கள் என்று மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

தலைநகர் டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அவர்கள் அறிவித்துள்ள பாரத் பந்த் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந் நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக டிசம்பர் 8ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் தமது முழு ஆதரவை தெரிவிக்கிறது.

இனியும், கொடுங்கோல் ஆட்சியையும், அநீதியையும் பொறுத்துக்கொள்ள முடியாது. அதானி – அம்பானி விவசாயச் சட்டத்தை திரும்பப் பெறுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.