திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி தங்களது வாழ்க்கையினை தொலைத்த நடிகைகள் பலர் உண்டு. சில நடிகைகள் வெளிப்படையாக இதனை தெரிவிப்பதுண்டு, ஆனால் பலர் இந்த விஷயத்தினை வெளியே தெரிவிப்பதில்லை.

இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை அதிதி ராவ் தனது #METOO குற்றசாட்டை முன்வைத்துள்ளார் .

இதுகுறித்து மனம் திறந்த ராஜ குடும்பத்தை சேர்ந்த அதிதி ஒரு நேர்காணலில், “நான் மும்பைக்கு வந்தபோது, ​​4 மாதங்களில் எனக்கு வேலை கிடைத்தது. ஆனால் இதற்குப் பிறகு, நான் காஸ்டிங் படுக்கையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த நாட்களில் நான் பல இரவுகளை அழுது கழித்துள்ளேன். அது என் வாழ்க்கையின் மிக மோசமான நாட்கள்.

நான் எப்போதெல்லாம் காஸ்டிங் படுக்கைக்கு எதிராகப் பேசிவருகிறேனோ , அப்போதெல்லாம் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனையில் இருந்து வெளியேற எனக்கு சிறிது நேரம் பிடித்திருந்தாலும், அதிலிருந்து வெளியேற முடிந்தது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.