மும்பை: மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் உயர தொடங்கியுள்ளது.

இந் நிலையில் மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:

கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.