சென்னை

திமுக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான கடம்பூர் ஜனார்த்தனன் மரணம் அடைந்தார்.

அதிமுகவின் மூத்த தலைவரான கடம்பூர் ஜனார்த்தனன் மத்திய நிதித்துறையில் இணை அமைச்சராகப் பணி புரிந்தவர் ஆவார்.   கடந்த 1998 முதல் 1999 வரை வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அமைச்சர் பதவி வகித்தவர் ஆவார்.

இவருக்கு தற்போது 91 வயதாகிறது.  வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் இன்று மாலை உயிர் இழந்துள்ளார்.  இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூர் என்னும் சிற்றூரை சேர்ந்தவர் ஆவார்.  இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் கல்வி பயின்றவர் ஆவார். இவர் சிறுகதை எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.