சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை பா.ஜ., தேசிய செயலர் ஹெச்.ராஜா இன்று சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வராக பதவியேற்றுள்ள ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஆகியோருக்கு வாழ்த்து கூறவே வந்தேன்.

முதல்வரை சந்தித்த போது அரசியல் பேசவில்லை. 19 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால், ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை’’ என்றார்.