சென்னை: சட்டசபை தேர்தல் தொடர்பாக டிசம்பர் 14ம் தேதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.

சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக டிசம்பர் 14ம் தேதி மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று இருவரும் அறிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 20ம் தேதியன்று நடைபெற்ற கூட்டத்தில் சட்டசபை தேர்தல் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து வழங்கப்பட்ட ஆலோசனைகளின் படி மேற்கொண்ட பணிகள் குறித்த விவரங்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் டிசம்பர் 14ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.