டில்லி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் முழக்கங்களை எழுப்பினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்த பிரதமரை சந்திக்க நேரம் வழங்காவிட்டால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்யப்போவதாக வலியுறுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அப்படி ராஜினாமா செய்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிடுமா என்று அதிமுக எம்.பி. மைத்ரேயன் கேட்டிருந்தார். மேலும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்தபோது, தமிழக நலனிற்காக இது போல் திமுக வலியுறுத்திருக்கிறதா என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் இன்று காவிரி விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்கக்கோரி  எம்.பி. நவநீதகிருஷ்ணன் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.