சென்னை:

மிழகத்தில் உள்ள பிரபலமான கோவில்களில் இன்று அதிமுக அமைச்சர்கள் முக்கிய பிரமுகர் கள் மழை வேண்டி சிறப்பு யாகம் செய்கின்றனர். அதிமுக தலைமை அறிவுறுத்திய நிலையில், இன்று மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் முக்கிய அதிமுக பிரமுகர்கள் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெறுகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,  அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் மழை பொழிய வேண்டிய கோவில்களில் அயாகம் வளர்த்து பூஜை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் உள்ள பல கோவில்களில் அதிமுக அமைச்சர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் பூஜைக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில், அண்டை மாநிலங்களை நம்பி பயனில்லை என்று கருதிய அதிமுக தலைமை, இறைவனின் பாதங்களில் சரணடைந்துள்ளது.