சென்னை

ர் கே நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது குறித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களின் ஒரு தொகுப்பு இதோ”

ஆர் கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக அணியில் ஒருவரான தினகரன் சுயேச்சையாக நின்று ஆளும் அதிமுகவை தோற்கடித்துள்ளார்.   அது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தை தி லீட் என்னும் செய்தித் தளம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளது.   அதன் தொகுப்பை இப்போது பார்ப்போம்.

சிதம்பரம் தொகுதியின் பாண்டியன், “நாங்கள் இரட்டை இலையின் வெற்றிக்கு மிகவும் பாடுபட்டோம்.   ஆனால் சில துரோகிகளால் எங்களால் வெல்ல முடியவில்லை” எனக் கூறி உள்ளார்.

அம்பாசமுத்திரம் முருகையா பாண்டியன், “கட்சியின் பலம் குறைந்து வருகிறது.   உடனே அனைத்து அணிகளும் இணையவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஜெயம் கொண்டான் ராமஜெயலிங்கம், “தினகரன் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளார்.   அணிகள் இணைப்பு என்பது மூத்த தலைவர்களின் முடிவைப் பொறுத்து அமையும்.  அவர்கள் சொல்வதை நாங்கள் பின் பற்றுவோம்” எனக் கூறி உள்ளார்.

தென்காசி செல்வமோகன் தாஸ் பாண்டியன், “இரு வேட்பாளர்களும் புரட்சித் தலைவி அம்மாவின் பிள்ளைகளே.    அவர்களில் ஒரு பிள்ளை வெற்றி பெற்றுள்ளார்” எனக் கூறி உள்ளார்.

இது போல அனைத்து உறுப்பினர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.  அவர்களில் பெரும்பாலானோர் தினகரன் பக்கம் சாய்வது நன்கு தெரிய வருகிறது.   அதே நேரத்தில் பலர் எடப்பாடி – ஓபிஎஸ் ஆகியோரையும் குற்றம் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.    பொதுவாக பலரும் அதிமுகவின் அணிகள் இணைய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

for reference https://twitter.com/thelede2016