சென்னை,

மிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று தமிழக அமைச்சர் மற்றும் அதிமுக எம்.பி சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை திடீரென மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பித்துரை, தமிழக நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  ஆகியோர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை வந்து தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை திடீரென சந்தித்து பேசினர்.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆளுநரை சந்தித்துவிட்டு வெளியே வந்த தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆளுநர் தனது நண்பர் என்றும், மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாகவும் இதில் எந்தவித அரசியலும் இல்லை என்று கூறினார்.

ஆனால், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தபோது, தமிழக மீன்வளத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.