கோவை: தொண்டாமுத்தூரில் திமுக சார்பில் போட்டியிடும்  திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு அதிமுகவினர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிவசேனாதிபதி தரப்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர்ல எஸ்.பி. வேலுமனி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில்,  கார்த்திகேய சிவசேனாபதி  போட்டியிடுகிறார். அங்கு போட்டி கடுமையாக உள்ளது. இந்த நிலையில், இன்று வாக்குப்பதிவை பார்க்க செல்வபுரம் வாக்குச்சாவடிக்கு சென்ற கார்த்திகேய சேனாதிபதியை தாக்க அதிமுகவினர் முயற்சி செய்துள்ளனர்.  பகிரங்கமாக  மிரட்டல் விடுக்கப்பட்டதுடன் அவரது கார் மீது கட்டையால் அதிமுகவினர் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசு தலைமையில் சுமார் 100 பேர் சேர்ந்து அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆட்சியிடம் புகார் அளித்துள்ளார்.அ திமுக-பாஜக தன்னை தாக்க முயற்சித்ததாக புகார் தெரிவித்துள்ளார்.