சென்னை

திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் எடுபடாது எனவும் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

வரும் மே மாதம் 2 ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.   தற்போது தமிழகத்துடன் மேலும் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் நடந்துள்ளது.  அனைத்து மாநிலத்தில் பதிவான வாக்குகளும் நாளை மறுநாள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நேற்று வெளியான தேர்தலுக்கு  பிந்தைய கருத்துக் கணிப்புக்களில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிய வந்ததில் அதிமுக அணி அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.   இன்று தமிழக அமைச்சர் ஜெயகுமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அமைச்சர் ஜெயகுமார், “மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு பொதுமக்கள் மகிழும் வகையில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும்.  தொண்டர்கள் தேர்தல் சமயத்தில் இருந்ததை போல் வாக்கு எண்ணிக்கையின் போதும் உற்சாகமாக இருக்க வேண்டும்  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு மக்களிடையே எடுபடாது.” எனக் கூறினார்.