டில்லி: குடியரசுத் தலைவர் பதவிக்கு அத்வானி மிகச் சரியான நபர் என பா.ஜ., எம்.பி.,யும் நடிகருமான சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

புதிய குடியரசுத் தலைவராக பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை தேர்வு செய்ய வேண்டும். அவரது நலம் விரும்பிகள் விருப்பம்தானஅ எனது விருப்பமும் ஆகும்.  பெரும் மதிப்புமிக்க அப்பதவிக்கு, மிகுந்த அனுபவம் வாய்ந்த அத்வானியே மிகச் சரியான நபர்.  பா.ஜ.,வின் மூத்த தலைவரான அவருக்கு அந்த கவுரவம் வழங்கப்படும் என நம்புகிறேன். நாட்டு மக்கள் அத்வானிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என்று சின்ஹா  தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலை, 24ல் முடிகிறது. இதையொட்டி, புதிய குடியரசுத்தலைவர்  தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் ஜூலை, 17ல், நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஆலோசித்து வரும் நிலையில், சத்ருகன் சின்ஹா இவ்வாறு தெரிவித்துள்ளார்.