ஈரோடு:

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த திருவனந்தபுரம் விரைவு ரெயிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சென்னைக்கு பயணித்தனர்.

அதே முன்பதிவு பெட்டியில் சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த 57 வயது வக்கீல் பிரேம் ஆனந்த் என்பவரும் கோவையில் ஏறினார். ரெயிலில் அனைவரும் தூங்கிய சென்னை பயணிகளுடன் வந்த 9 வயது சிறுமியிடம் பிரேம் ஆனந்த் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமியின் சத்தம் கேட்டு கண் விழித்த உறவினர்கள் பிரேம் ஆனந்தை பிடித்து ரெயில்வே பரிசோதகரிடம் ஒப்படைத்தனர். ஈரோடு ரெயில் நிலையத்தில் பிரேம் ஆனந்தை கைது செய்த ரெயில்வே போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.