ஆசிய கால்பந்து போட்டியில் பக்ரைன் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 0-1 என்ற கோல்கணக்கில் தோல்வ்பி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறியது.

footbal

17வது ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் ஐக்கிய அரபு எமீரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 3வது லீக் போட்டியில் பக்ரைன் அணியை எதிர்க் கொண்டது.

போட்டி தொடங்கியதில் இருந்து முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறின. அதன்பிறகு கிடைத்த ஒருசில வாய்ப்புகளையும் கோலாக மாற்ற இரு அணிகள் முயன்றும் அது வீணாகியது. இதனை தொடர்ந்து 91வது நிமிடத்தில் பக்ரைன் அணி வீரர் ஜமால் ரஹித் முதல் கோல் அடித்தார். இதையடுத்து குறைந்த நேரமே இருந்ததால் இந்திய அணியால் பதிலுக்கு கோல் அடிக்க முயடியாமல் போனது.

இதனால் இந்திய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பக்ரைன் அணி வெற்றிப்பெற்றது. இதில் தோல்வியடைந்ததால் ஏ பிரிவில் இருந்த இந்திய அணி 4இடத்திற்கு தள்ளப்பட்டு தொடரில் இருந்து வெளியேறியது. இந்தியாவை வீழ்த்தி வெற்றிப்பெற்ற பக்ரைன் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறின.