காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவத் தளத்தில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர்.

அந்நாட்டின் கிழக்கு கஸ்னி மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் தலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காருடன் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த அதிகாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். கஸ்னி மாகாண சுகாதாரத் துறைத் தலைவர் ஜாஹிர் ஷா நிக்மலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்துள்ளார்.

ஆனால், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்கள் வேறுபட்டு இருக்கின்றன. 10 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.