காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

அந்நாட்டின் காஸ்னி மாகாணத்தில் உள்ள கெலன் என்ற மாவட்டத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. குண்டுவெடிப்பில் 15க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடல் சிதறி பலியாகினர். 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தாரிக் அரியன் கூறி உள்ளார். இந்த கோர தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.