காபூல்: ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் 5 தலிபான்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ் மாகாணத்தில் அந்நாட்டு ராணுவம் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. தலிபான்கள் பதுங்கியிருந்த இடங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதிரடி தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.

விசாரணையில் கொல்லப்பட்ட 9 பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பது தெரிய வந்தது. அதேபோல் பாக்லான் மாகாணத்தின் ஜமன்கைல் மற்றும் சாஷ்மாய் ஷேர் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.