காபூல்: ஆப்கானிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து ஒட்டு மொத்த பாதிப்பு 42,033ஆக அதிகரித்து உள்ளது.  24 மணி நேரத்தில் மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் நாட்டில் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 1,556ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 34,446 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 1,25,112 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.