லண்டன்: பிரிட்டன் தலைநகரிலுள்ள ஒரு உயிரியல் பூங்காவில் இருந்த ஆப்ரிக்க சாம்பல் நிற கிளிகள், பார்வையாளர்களை மரியாதை குறைவாகவும், மனம் புண்படும்படியாகவும் பேசியதால், அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து கூறப்படுவதாவது; லண்டனிலுள்ள லின்கோல்ன்ஷைர் உயரியல் பூங்காவில் உள்ள கிளிகள் இருப்பிடத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பில்லி, எரிக், டைசன், ஜேடே மற்றும் எலிசி என்ற பெயர்கள் கொண்ட 5 ஆப்பிரிக்க கிளிகள் புதிய வரவாக வந்து சேர்ந்தன.
இவை வந்த சில நாட்களிலேயே பார்வையாளர்களிடம் கிண்டலாகவும் மரியாதைக் குறைவாகவும் நடந்து கொள்வதாக நிர்வாகத்தினருக்கு தெரியவந்துள்ளது. ஒரு கிளி பார்வையாளரிடம் சத்தியம் செய்யும்; மற்றொரு கிளியோ பார்வையாளரைப் பார்த்து சிரிக்கும்.
அதேசமயம், இன்னொரு கிளி மரியாதைக் குறைவாக பேசும். மனம் புண்படும்படி கிளிகள் நடந்து கொண்டதாக பார்வையாளர்கள் இதுவரை புகார் அளிக்கவில்லை என்றாலும் நிர்வாகத்தினர் அவற்றை தனியாக வேறொரு இடத்திற்கு மாற்றியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.