புதுடெல்லி:

புதுடெல்லியில் நடந்த 70-வது குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.


கடந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்திக்கு 6-வது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், 70-வது குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட ராகுல்காந்திக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. அவர் பக்கத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அமர்ந்திருந்தார். இருவரும் புன்னகைத்தவாறே பிரம்மாண்ட அணிவகுப்பை பார்த்துக் கொண்டிருந்தனர்.

முன்னதாக, அனைவருக்கும் குடியரசுதின வாழ்த்துகளை ட்விட்டரில் ராகுல் காந்தி தெரிவிந்திருந்தார்.