ண்டன்

டந்த ஏப்ரல் மாதம் பிரிட்டன் இளவரசர் வில்லியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது.

உலகெங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பல பிரபலங்களைப் பாதித்துள்ளது.

பிரிட்டன் பட்டத்து இளவரசர் சார்லஸ் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தார்.

அப்போது அரச குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகத் தகவல் வந்தது.

ஆயினும் அது மறுக்கப்பட்டது.

இந்நிலையில் சார்லஸ் மகனும் இளவரசருமான வில்லியம் அதே கால கட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த தகவலை கென்சிங்டன் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் வில்லியம்ஸ் தனது பாதிப்பு குறித்த விவரங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்பியதால் நாட்டுக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் சொல்லப்படுகிறது.