நடிகர் சிம்பு கேட்டுக் கொண்டபடி அவரது பேனருக்கு ரசிகர் ஒருவர் அண்டாவில் பால் ஊற்றிய வீடியோவ சமூக வலைத்தளங்ளில் வைரலாகி வருகிறது.

simpu

நடிகர் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் தனது படம் வெளியாகும் நாளில் கட் அவுட் வைக்க வேண்டாம் என்றும், பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக தங்கள் பெற்றோருக்கு ஆடை எடுத்து தரும்படியும் சிம்பு தனது ரசிகர்களுக்கு வீடியோ மூலம் அன்பு கட்டளை இட்டார். இது சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்ச்னங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து மற்றுமொரு வீடியோவை சிம்பு வெளியிட்டார். அதில், “ எனக்கு எங்கிருந்து ரசிகர்கள் இருக்க போகிறார்கள் என்றும், இரண்டு மூன்று பேர் தான் ரசிகர்களாக இருப்பார்கள். அவர்களையும் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என சிம்பு கூறியது விளம்பரத்திற்காக தான் என்றும் சிலர் கூறுகிறார். அதனால் எனது ரசிகர்களுக்கு ஒரு அன்பு கட்டளை. வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம் வெளியாகும் நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு வேற லெவலில் கட் அவுட் வையுங்கள். பாக்கெட் பால் இன்றி அண்டாவில் வைத்துக் கொண்டு பால் அபிஷேகம் செய்யுங்கள் “ என சிம்பு பேசி இருந்தார்.

இதையடுத்து, சிம்புவின் ஆசையை ரசிகர் ஒருவர் நிறைவேற்றியுள்ளார். அவர் அண்டா நிறைய பால் வைத்துக்கொண்டு தூக்க முடியாமல், குண்டானில் எடுத்து சிம்பு பேனருக்கு பால் ஊற்றும் காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. திருச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற அந்த ரசிகர் “திருச்சி ரசிகர்களின் அண்டால பால் ஆரம்பம் இது சும்மாதான்… பிப்ரவரி 1ம் தேதி தான் பாக்க பேரிங்க சிம்பு ரசிகர் ஆட்டத்தை.. என்றும் தங்க தமிழன்” என கூறியுள்ளார்.

இதற்கிடையே தனது பேனருக்கு அண்டாவில் பால் ஊற்ற சொன்ன சிம்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லை என்றால் அவர் மீது வழக்கு தொடருவோம் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.