மும்பை: உலகின் 18வது இடத்திலுள்ள டென்னிஸ் வீரரான நிக்கோலஸ் பேஸிலாஷ்விலியை வீழ்த்தியதன் மூலம், இந்திய டென்னிஸ் வீரர் பிரஜ்‍னேஷ் குன்னேஸ்வரன், தரவரிசையில் 84வது இடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

நிக்கோலஸ் பேஸிலாஷ்விலிக்கு எதிராக ஆச்சர்யப்படத்தக்க பெரிய வெற்றியைப் பெற்றதன் மூலம், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஏ.டி.பி. தரவரிசையில் 61 புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்றார் பிரஜ்னேஷ்.

அதேசமயம், தரவரிசையில் முதல் 200 இடங்களுக்குள் இருந்த யூகி பாம்பரி, காயம் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளில் முதன்முறையாக தன் இடத்தை இழந்துள்ளார். ராம்குமார் ராமநாதனும் 3 இடங்கள் கீழே சரிந்துள்ளார்.

சாகேத் மினெனி மற்றும் சசிகுமார் முகுந்த் ஆகியோர், ஒற்றையர் போட்டியில், அடுத்த சிறந்தநிலை ஆட்டக்காரர்களாக உருவெடுத்துள்ளனர்.

– மதுரை மாயாண்டி