டில்லி

ஜ் பயணிகளுக்கு வயது வரம்பு மற்றும் கொரோனா பரிசோதனை அவசியம் ஆக்கப்ப்பட உள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அவற்றில் ஒன்றாக இஸ்லாமியர்களின் புனிதப் பயணமான ஹஜ் பயணத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து 2021 ஆம் வருட ஹஜ் பயணத்துக்குப் பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹஜ் பயணத்தில் பெண்கள் ஆண் துணையின்றி கலந்துக் கொள்ள இம்முறையும் அனுமதி தொடர்கிறது.

மேலும் வயது வரம்பு மற்றும் கொரோனா பரிசோதனை அவசியம் ஆக்கப்பட உள்ளது.

இந்தியாவில் நேற்று முதல் ஹஜ் பயணம் செய்யப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 10 ஆம் தேதியுடன் பதிவு செய்வது முடியும் என சிறுபான்மை நல அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.