டில்லி

த்திய அரசு கொரோனா பாதிப்பு அடைந்தோர் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 3474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 238 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 91 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் அதிக அளவில் 537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்ததாக தமிழகத்தில் 446 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

டில்லியில் 445 பேரும், கேரளாவில் 306 பேரும் தெலுங்கானாவில் 229 பேரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மொத்தம் 91 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தற்போது 58 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

வயது வாரியாக பாதிப்பு அடைந்தோர் விவரம் வருமாறு

0-20 வயது                                        9%

21-40 வயது                                      42%

41-60 வயது                                      32%

60 வயதுக்கு மேற்பட்டோர்        17%

சுமார் 1000 நோயாளிகள் தப்லிகி ஜமாத் கூட்டத்துடன் தொடர்பு உள்ளவர்கள் ஆகும்.