மிழகத்தில் அக்னி நட்சத்திரம் வரும் (மே 4ந்தேதி) சனிக்கிழமை தொடங்குகிறது. ஃபானி புயல் தமிழகத்தில் மழையை கொடுத்து, அக்னியின் கோரத்தை அமைதிப்படுத்தும் என எதிர்பார்த்தால், அதுவும் தமிழகத்தை வஞ்சித்து ஒடிசாவை நோக்கி செல்கிறது.

இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் வரும் 4ந்தேதி தொடங்குகிறது. கடந்தஆண்டை விட இந்த ஆண்டு வெப்பம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே பல இடங்களில் வழக்குத் துக்கு மாறாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் போது வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்று நினைத்தாலே… பயத்தை ஏற்படுத்துகிறது.

இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வேலூர், சேலம், கரூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, பாளையங்கோட்டை போன்ற நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வெயிலில் இருந்து தப்பிக்கவும், அதனால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை செய்துகொள்வது நன்மை பயக்கும்.

அக்னி நட்சத்திரம் என்பது என்ன?

சித்திரை மாதம், பரணி 4ஆம் பாதத்தில் தொடங்கி ரோகிணி முதல் பாதம் வரை சூரியன் சஞ்சாரிக் கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. அக்னி நட்சத்திரத்தை முன் ஏழு, பின் ஏழு என 2 பிரிவாக பிரித்து கூறுகிறது ஜோதிட சாஸ்திரம். சித்திரை கடைசி வாரம் தொடங்கி, வைகாசி முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான கத்திரி வெயில் எனப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டுக்குப் பிறகு 21 நாட்கள் அக்னி நட்சத்திர காலம் வாட்டி வதைக்கிறது.  சித்திரை மாதம் 21-ம் தேதி தொடங்கி, வைகாசி 14-ம் நாள் முடிவடைகிறது. இந்த ஆண்டு மே 4-ம் தேதி தொடங்க உள்ளது.  இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம்  26 நாட்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் பயங்கரமாக இருக்கும். சுட்டெரிக்கும் வெயிலானது நாளுக்கு நாள்  அதிகமாகி கொண்டே 21-வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு படிப்படியாக வெயில் குறையத் தொடங்கும்.

கடந்த 2018-ம் ஆண்டு அக்னி வெயில் காலத்தின் தொடக்கத்தில் 100 டிகிரியில் தொடங்கி 108 டிகிரி வரை சென்றது.இந்த ஆண்டு அதைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய வெயிலே பல மாவட்டங்களில் 107 டிகிரி வரை எட்டியுள்ளது.

இதற்கிடையில்,  குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வெளி மண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் அவ்வப்போது கடந்த சில நாட்களாக மழை பெய்து  வெப்பத்தை தணித்து வருகிறது. இருந்தாலும், அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாகவே இருக்கும் என வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். …