சண்டிகர்:

மகராஷ்டிரா, உ.பி. மாநிலங்களைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பினை சட்டப்பேரவையில் வெளியிட்டு பேசிய முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்ததாவது:

“ 5 ஏக்கர் வரை விவசாய நிலங்களைக் கொண்ட சிறு மற்றும் குறு விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள்  முழுவதுமாக  தள்ளுபடி செய்யப்படுகின்றன. , மற்ற குறு விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்”  என்று அவர் அறிவித்தார்.

அமரீந்தர் சிங்

மேலும், “இந்த கடன் தள்ளுபடியால் மாநிலத்தில் உள்ள 18.5 லட்சம் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த 10.25 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் ., தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

பஞ்சாபில் நலிவடைந்துள்ள விவசாயிகளுக்கு உதவும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்ய பொருளாதார நிபுணர் டி.ஹேக் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையின்படி இந்தக் கடன்களை அம்மாநில அரசு தள்ளுபடி செய்துதுள்ளது.

ஏற்கெனவே உத்தரப்பிரதேசம் மற்றும் மகராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் விவசாயக்கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.