சென்னை,

சென்னை தாம்பரத்தில் வேளாண்துறை உதவி பிரிவு அலுவலர் தீபன் சக்ரவர்த்தி.

இவர் இன்று அதிகாலை வீட்டில் தற்கொலை செய்துள்ளார்.

தீபன் சக்ரவர்த்தி தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை.

அலுவலக நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து  போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே நெல்லை வேளாண்மைத்துறை செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி, வேளாண்மைத் துறையில் 7 டிரைவர்கள் நியமனத்தில் உயரதிகாரிகள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் கொடுத்த நெருக்கடியால் ரயில் முன் பாய்ந்து கடந்த 2015ம் ஆண்டு பிப். 20ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக அமைச்சர் அப்போதைய வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை முதல்வராக இருந்த ஜெயலலிதா பதவி நீக்கி நடடிவக்கை எடுத்தார்.

ஆனால், தற்போது சென்னையில் வேளாண் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..