புதுடெல்லி:

இறுதிகட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான மே 18-ம் தேதி பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் பிரதமர் மோடி  தரிசனம் செய்கிறார்.


மே 19-ம் தேதி இறுதி கட்ட வாக்குப் பதிவு நடக்கிறது. இந்நிலையில், மே 18-ம் தேதி 2 நாள் பயணமாக உத்ராகண்ட் மாநிலத்துக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

மே 18-ம் தேதி பத்ரிநாத் கோயிலிலும், மே 19-ம் தேதி கேதார்நாத் கோயிலிலும் தரிசனம் செய்யும் அவர், கேதார்புரி மறு சீரமைப்பு திட்டத்தை ஆய்வு செய்கிறார்.

அங்கு தங்கும் அவர், தியான குகைக்கு செல்கிறார். கேதார்நாத்தில் ஒரு நாள் தங்கும் பிரதமர், டில்லி திரும்புகிறார்.

கேதார்நாத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது, அதில் 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.  இதனையடுத்து மறுசீரமைப்புக்காக அரசு ரூ.75 கோடி செலவு செய்தது. இந்த திட்டத்தை மோடி ஆய்வு செய்யவுள்ளார்.