சென்னை:

த்தியில் ஆளும் பாரதியஜனதா அரசுக்கு பயந்தே அந்த கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்க நினைக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

இன்று 92வது  பிறந்தநாள கொண்டாடும் முன்னாள் தமிழக அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கு, அவரது வீட்டுக்கு சென்று  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த திருநாவுக்கரசர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அதிமுகவின் எந்த பிரிவு பாஜகவோடு கூட்டணி வைத்தாலும் அது அவர்களுக்கு அரசியல் ரீதியாக வீழ்ச்சியை கொடுக்கும்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உயிரோடு இருந்தால் பாஜகவோடு அதிமுக கூட்டணி வைக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் பெயரை சொல்லிக்கொண்டு ஆட்சி செய்பவர்கள் பாஜகவோடு கூட்டணி வைக்க நினைக்கிறார்கள்.

இது அக்கட்சியின்  தலைவர்களின் கொள்கைகளுக்கு எதிரானது.

பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்தால் அது பாசத்தால் வந்ததாக இருக்காது. பயத்தால் வந்ததாக இருக்கும்.

அதிமுகவின் எந்த பிரிவு பாஜகவோடு கூட்டணி அமைத்தாலும் அது அந்த பிரிவுக்கு அரசியல் ரீதியாக நஷ்டத்தை கொடுக்கும்.

மேலும், தமிழக  எல்இடி பல்பு கொள்முதலில் பல கோடி ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற வேண்டும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.