சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று கூட்டாக அறிவித்தனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை சந்திக்க, வலிமையான தலைமை அதிமுகவில்இல்லாததால், தற்போதைய முதல்வர் எடப்பாடிக்கும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் வெடித்தது.

கடந்த சில வாரங்களாக 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து  கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில், முதல்வர் வேட்பாளர் குறித்துஅறிவிக்க முடியாத நிலையில், அக்டோபர் 7ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி  அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களாக முதல்வர் வேட்பாளர் பதவிக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தது.  அதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டு இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

முன்னதாக இன்று காலை முதலே அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் குவிந்து வந்தனர். அதையடுத்து காலை 10 மணி அளவில் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்பட்டது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வர், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தார்.