சென்னை: அதிமுக சார்பில்,  தேர்தல் பிரசாரம் தொடங்கப்ட்டுள்ள நிலையில்,  ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில்  நாளை முதல் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. திமுக சார்பில், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் தொடங்கி உள்ளது. அதைத்தொடர்ந்து, கமல்ஹாசனும் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். இந்த நிலையில்,  அதிமுகவும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், நாளை முதல்   வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில், தங்களது ஆட்சியின் சாதனைகளை விளக்கி அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நாளை நாமக்கல்லில் பிரசாரத்தை தொடங்குகிறார். அதையடுத்து, அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.