சென்னை:
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஆலந்தூர் அதிமுக வேட்பாளர் வளர்மதி மகன் பணம் பட்டுவாடா செய்ததற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஆலந்தூர் நாசரத்புரம் 1 மற்றும் 4-வது வார்டில் வளர்மதி மகன் மூவேந்தன் இரவு வீடு வீடாக சென்று ரூ.500 பணப்பட்டுவாடா செய்துள்ளனர்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பணப் பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூ. 15,000 மற்றும் அவர்கள் ஒட்டி வந்த காரை திமுக நிர்வாகிகள் மடக்கி பிடித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் ஒப்படைத்தனர்.