இந்த நிலையில் வரும் டிசம்பர் முதல்வாரத்தில் பொதுக்குழுவை கூட்ட திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக ஆலோசனைகளை முன்னெடுத்து வரும் சூழலில், அதிமுகவிலும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க பொதுக்குழு கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், அ.தி.மு.க.வில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டு குழுவுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியதும் அவசியமாக உள்ளது.
இதன் காரணமாக, அ.தி.மு.க. பொதுக்குழுவை வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரம் அல்லது 2-வது வாரம் கூட்ட முடிவுசெய்யப்பட்டு இருப்பாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ள தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் , சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்ளும் வகையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அதிமுக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.