சென்னை:
திமுக அரசின் பாரத்நெட் ஒப்பந்த ஊழல், டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது என்று கடுமையாக சாடியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், இந்த விவகாரத்தில் பச்சைப் பொய் சொன்ன தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ராஜினாமா செய்வாரா, தமிழக முதல்வர் உரிய விளக்கம் அளிப்பதாக என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில். பாரத் நெட் டெண்டர் தொடர்பாக தொடர்ந்து தவறான தகவல் அளித்த அமைச்சர் ஆர். பி உதயகுமார் பதவி விலகுவாரா..? பாரத் நெட் டெண்டர் திட்டம் ரத்து தொடர்பாக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும்  என்று வலியுறுத்தி   உள்ளார்.