சென்னை: ஸ்டாலின், உதயநிதி, கே.என்.நேரு போட்டியிடும் தொகுதிகள் உள்பட 5 தொகுதிகளில் தேர்தல் ரத்துசெய்யக்கோரி அதிமுக சார்பில்  தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி, அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும்  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு  தொகுதி, திருவண்ணாமலை, காட்பாடி  ஆகிய 5 தொகுதிகளில் திமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாகவும், எனவே, இந்த குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.

இந்த 5 தொகுதிகளிலும் திமுகவினர் ‘கூகுள் பே’ மூலம் நவீன முறையில் பணப் பட்டுவாடா செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதிமுகவின்  புகார் மனு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.