சென்னை: ஈ, கொசுவுக்கு எல்லாம் அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கம் பயப்படாது  என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: டிடிவி தினகரன் பதற்றத்தில் இருக்கிறார். சசிகலா சிறையில் இருந்தபோது டிடிவி அவரது சொத்துக்களை கொள்ளை அடித்து விட்டார்.

வெளியே வந்துள்ள சசிகலா கணக்கு கேட்பார் என்ற பதற்றத்தால் டிடிவி தினகரன் உள்ளார். சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை. சசிகலாவுக்கு எதிராக மற்ற அமைச்சர்கள் வாய் திறக்க மறுக்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக ராணுவக் கட்டுப்பாடு உள்ள ஒரு கட்சி அதில் எல்லோருக்கும் ஒரே நிலைப்பாடு தான் என்றார்.

பேசாதவர்கள் எல்லாம் வேறு நிலைப்பாட்டில் உள்ளதாக எடுத்துக்கொள்ள கூடாது. என்னுடைய கருத்து தான் கட்சியின் கருத்து. சசிகலா தேவையில்லை என்ற என்னுடைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை. ஈ, கொசுவுக்கு எல்லாம் அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கம் பயப்படாது  என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.