சென்னை:

நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள  கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், உளுந்தூர்பேட்டை எம்எல்ஏவுமாக குமரகுருவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நலம் விசாரித்தார்.

முதல்வர் எடப்பாடியின் தீவிர ஆதரவாளரான உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுருவுக்கு நேற்று முன்தினம் அதிகாலையில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, அருகில் உள்ள முண்டிய பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில்,தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரை நேரில்சென்று நலம் விசாரித்தார். தற்போது குமரகுரு உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.

குமரகுரு எம்எல்ஏ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில் கட்டுவதற்காக, தேவஸ்தானம் போர்டுக்கு 5½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாகக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.