சென்னை:

ரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 2 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகி வருகிறது. இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.  இதன் காரணமாக அதிமுகவினர் உற்சாக வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி எதிர்பார்த்ததுதான் என்று கூறினார்.   இது ஒன்றும் புதியதல்ல. அவர்கள் ஆளுங்கட்சி. பணபலத்தால் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளனர். மக்கள் செல்வாக்கால் அல்ல.

கடந்த முறை தி.மு.க. ஆட்சி நடக்கும் போதும் கூட நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க தான் வெற்றி பெற்றது. . சசிகலா உரிய நேரத்தில் சிறையில் இருந்து வெளியே வருவார். இப்போது வருவார், நாளைக்கு வருவார் என்ற யூகங்களுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.

ஆட்சி முடிந்த பிறகு அ.தி.மு.கவில் நிறைய பேர் காணாமல் போய் விடுவார்கள்  வரும் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்!” என்றும் கூறினார்.