சென்னை,

ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலரை அதிமுக கட்சியில் இருந்து நீக்கியது.

இதற்கு துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, தனது டுவிட்டர் பதவில் அதிமுக முதல்வர் துணை முதல்வர் ஆண்மையற்றவர்கள் என்று கூறியிருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக சார்பாக அமைச்சர் ஜெயக்கும் கடும் விமர்சம் செய்திருந்தார்.

அதற்கும் குருமூர்த்தி பதில் அளித்திருந்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர், மூட்டை பூச்சிக்கெல்லாம்  அதிமுக பயப்படும் இயக்கம் அல்ல என்று கூறினார்.

இன்று  சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையை கூறிவிட்டு பின்னர் அதற்கு மாறுபட்ட அர்த்தத்தை கூறுவது சரியல்ல என்றும், எங்களுக்கும் அதுபோல பேச தெரியும் என்றும் கறாராக கூறினார்.

“புறம்போக்கு” நிலம் என்பதை புறம்போக்கு என தனியாக சொன்னால் கோபம் வருமா? வராதா? என்றும் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பத்திரிகையாளர் என்ற பண்பு இருக்கும் என நம்புகிறேன்/

குருமூர்த்தி  தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது, அரசியலில் நாகரிகம் தேவை ஜெயக்குமார்  என்ற அவர், குருமூர்த்தி   பண்பாளர் என்றால் அவர் தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற்றிருக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர்,  மூட்டை பூச்சிக்கெல்லாம் அதிமுக பயப்படும் இயக்கம் அல்ல என்று கூறினார்.

மேலும், தினகரன் சட்டசபைக்கு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,  தினகரன் சட்டப்பேரவைக்கு வருவதால் எந்த நெருக்கடியும் இல்லை.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.