சென்னை:
“கொரோனாவை பயன்படுத்தி கொள்ளையடித்து – மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதும் அதிமுக கொள்ளையர் கூட்டத்தை வைரசைப் போல விரட்டியடிக்க சூளுரைப்போம்!”  திமுகழக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில்   கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழகஅரசு தவறான தகவல் தெரிவித்த வருவதாக திமுக உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இதை முதலில் மறுத்த அதிமுக அரசு, நேற்று உண்மையை ஒத்துக்கொண்டது. அதன்படி,   444 பேருடைய மரணங்கள் விடுபட்டுள்ளதாக கூறி, புதிதாக சேர்த்தது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,144ஆக உயர்ந்துள்ளது.