புதுடெல்லி:

சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா நிர்வாக கவுன்சில் உறுப்பினராக பிரபுல் படேல் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.


அகில இந்திய கால்பந்து அமைப்பின் தலைவராக பிரபுல் படேல் உள்ளார். இவர் ஃபிஃபா அமைப்பின் நிர்வாக கவுன்சில் உறுப்பினராக தேர்வாகவுள்ளார். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டால், இவர் 4 ஆண்டுகள் இந்த பொறுப்பில் இருப்பார்.

ஏப்ரல் 6-ம் தேதி கோலாலம்பூரில் நடைபெறும் தேர்தலில் 8 உறுப்பினர்களில் 5 பேர் தேர்வு செய்யப்படுவர். இதில் பட்டேல் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

அவ்வாறு தேர்வு செய்யப்பட்டால், உலக அளவிலான அமைப்பின் முதல் உறுப்பினராகும் பெருமையை பட்டேல் பெறுவார்.