ஸ்ரீநகர்:

ந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், காஷ்மீரில் விமானப்படை விமானம் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தை இயக்கிய 2 விமானிகளும் பலியானார்கள்.

காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் உள்ள  விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கி தீ பிடித்தது. இதில் அதில் பயணம் செய்த  2 விமானிகள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், விமான விபத்துக்கான காரணம் என்ன என்பத குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.